×

மூணாறில் கடும் உறைபனி: முற்றுகையிடும் வெளிநாட்டினர்

மூணாறு: மூணாறில் தற்போது கடும் உறைபனி நிலவுவதால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வருகின்றனர். கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலமான மூணாறில் தற்போது அதிக குளிர் நிலவும் நிலையில் உறைபனி படரத் துவங்கியுள்ளது. பொதுவாக மூணாறில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர் அதிகரிக்கும்.

தற்போது மூணாறில் காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் மாலை நேரங்களில் அதிகளவு குளிர் நிலவுகிறது. இங்கு முக்கிய எஸ்டேட் பகுதியான சிவன்மலை, செண்டுவாரை, நல்லத்தண்ணி, சைலன்ட்வாலி போன்ற பகுதிகளில் உறைபனி நிலவ துவங்கியுள்ளது. இதையடுத்து மூணாறில் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அதிகாலையில் நிலவும் உறைபனியை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசிக்கின்றனர்.
வரும் நாட்களில் மூணாறில் குளிரின் அளவு அதிகரிக்கும் என்று மூணாறில் உள்ள உப்பசி வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tags : Munnar , Severe frost, Munnar, aliens haunt
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...