×

மேட்டுப்பாளையம் சாலையில் சிதறிக்கிடந்த சிம்கார்டு படிவங்கள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சாைலயில் சிதறிக்கிடந்த சிம்கார்டு படிவங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் நால் ரோட்டில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் நூற்றுக்கணக்கான சிம்கார்டு பெற வழங்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சிதறிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  தகவலறிந்த சிறுமுகை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் சிதறிக் கிடந்த படிவங்களை எடுத்து ஆய்வு செய்தனர். அனைத்து படிவங்களும் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் பொதுமக்கள் சிம்கார்டு வாங்கும்போது வழங்கப்பட்ட படிவங்கள் என தெரியவந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் புகைப்படங்கள், அடையாள அட்டை நகல்கள் இணைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் சிம் கார்டு வாங்கும்போது வழங்கக்கூடிய இந்தப் படிவங்கள் அனைத்தும் அந்தந்த செல்போன் நிறுவனங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மத்திய தகவல்தொடர்பு துறையின் டிராயின் நிபந்தனையாகும். ஆனால், பாதுகாக்கப்பட வேண்டிய இந்த படிவங்களை சாலையில் வீசி சென்றது யார்? என்பது குறித்து,  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : road ,Mettupalayam , Scattered,simcard forms, Mettupalayam road
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி