×

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு: மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் 31ல் நடக்கிறது

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் வரும் 31ம்தேதி நடக்கிறது. இதுகுறித்து, திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ‘மாநாடு’ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 31ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில், திருச்சி, மணப்பாறை சாலையில் அமைந்துள்ள ‘கேர் கல்லூரி’ வளாகத்தில் நடைபெறும் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு உட்பட்ட திமுக மாவட்டக் செயலாளர், பொறுப்பாளர்களை அணுகி உரிய அனுமதி பேட்ஜ் பெற்று, இம்மாநாட்டில் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Leaders ,Elections ,Members Convention of Rural Local Government ,MK Stalin Rural Local Government Elections of Leaders and Members Convention: Trichy ,MK Stalin , Rural Local Elections, Success, Leaders, Members, Conference, MK Stalin Leadership
× RELATED மதிமுக தீயின் பொறி.. திராவிட நெறி.....