×

பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பொன்னேரி-மீஞ்சூர் இடையே 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் இரவு 10.45 மணி முதல் அதிகாலை 2.30 மணிவரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தி பிறகு இயக்கப்படும். தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் 35 நிமிடம் பொன்னேரிக்கு அருகே நிறுத்தப்படும். டேராடூன்-மதுரை ரயில் செவ்வாய், புதன் கிழமைகளில் 50 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் சாலிமர்-திருவனந்தபுரம் ரயில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பொன்னேரியில் இருந்து 10 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். முசாபர்பூர்-யஷ்வந்த்பூர் ரயில் புதன்கிழமைகளில் 10 நிமிடம் தாமதமாகவும், பாட்னா-எர்ணாகுளம் ரயில் 10 நிமிடமும் ஹவுரா-சென்ட்ரல் ரயில் கவரப்பேட்டையில் இருந்து 10 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.


Tags : Southern Railway ,announcement ,Express , Maintenance Works, Express Trains, Operated, Southern Railways, Announcement
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...