×

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை அலங்கரிக்கும் அக்கார்டு மலர்கள்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வம் நிலையில், நுழைவு வாயில் பகுதியில் வளர்ந்துள்ள அக்கார்டு மலர்களே பூங்காவை அலங்கரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். பூங்காவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காகவும், மகிழ்விப்பதற்காகாவும் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் ேமற்கொள்ளப்படுவது வழக்கம். ஆண்டிற்கு ஆண்டு இப்பூங்காவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.இதனால், கண்ணாடி மாளிகை தவிர வேறு எங்கும் பல விதமான மலர்கள் இல்லை. ஏப்ரல் மாதத்திற்கு மேல் தான் பூங்காவில் உள்ள அனைத்து இடங்களிலும் மலர்களை காண முடியும். இந்நிலையில், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நுழைவு வாயில் பகுதியில் அக்கார்டு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஊதா நிற மலர்கள் பூத்துள்ளன. தற்போது பூங்காவில் வேறு மலர்கள் இல்லாத நிலையில், இப்பூக்களே சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். மேரிகோல்டு நாற்றுகள் தயாரானவுடன் இந்த மலர் செடிகள் அகற்றப்பட்டு நுழைவு வாயில் பகுதியில் உள்ள நட்சத்திர வடிவிலான பாத்திகளில் மேரிகோல்டு மலர் செடிகள் நடவு செய்யப்படும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்….

The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை அலங்கரிக்கும் அக்கார்டு மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Feedi Government Botanical Park ,Govt Botanical Park ,Wam ,Feeder Government ,Botanical ,Park ,Dinakaran ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்...