சென்னை: சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரனோ வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். சீனாவில் பரவி வரும் கொரனோ வைரஸின் பாதிப்பு தமிழகத்தில் இருக்காது என்றும் கூறியுள்ளார்.