பூவை : பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கம் காசி விசுவநாதர் கோயில் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. குளத்தில் யாராவது விஷம் கலந்து இருக்கலாம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவில் குளத்தில் மீன்கள் இறக்க காரணமானவர்கள் மீது பூவிருந்தவல்லி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். மேலும் நசரத் பேட்டை காவல்துறையினர் செம்பரம்பாக்கம் கோயில் குளத்தில் மீன்கள் இறந்தது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.