×

நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் சாவு

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் கவுதம் (18). இவர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, தனது நண்பர்கள் 9 பேருடன் கவுதம் கிழக்கு கடற்கரை சாலை அக்கரைக்கு சென்றார். அங்கு நண்பர்களுடன் கடலில் ஜாலியாக குளித்தபோது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கிய கவுதம் உயிருக்கு போராடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதனால் அவர் கடலில் மூழ்கி மாயமானார். உடனே அந்த பகுதி மீனவர்கள் இறங்கி தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியில் கவுதம் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்து நீலாங்கரை போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : sea ,College student ,friends , While bathed in sea, caught in giant wave, college student dies
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்