×

பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பெரம்பூரில் பரபரப்பு

சென்னை: பெரம்பூரில் பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் வியசார்பாடி பெரியார்நகர் இஸ்மாயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் சம்பத் இவரது மகன் சந்தோஷ்குமார்(23). இவர் மீது செம்பியம், வியசார்பாடி, எம்.கே.பிநகர் ஆகிய காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், சந்தோஷ்குமார் நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டு அருகே அம்பேத்கர் தெரு பகுதியில் நண்பர்களுடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கே,8 பேர் கொண்ட,மர்ம ரவுடி கும்பல் 3 இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கியதும், சந்தோசை, வெட்ட தொடங்கினர். இதனை பார்த்த  அதிர்ச்சியடைந்த சந்தோஷ், பயந்து, உயிர் தப்ப அருகே இருந்த அவரது வீட்டிற்குள் ஓடி ஒளிந்தார். ஆனால், மர்ம கும்பல் அவரை துரத்தி சென்று, வீட்டிற்குள் புகுந்து சந்தோசை சரமாரியாக வெட்டினார்கள்.

ரத்த வெள்ளத்தில் முழ்கிய சந்தோஷ் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இதனையடுத்து மர்ம கும்பல் அங்கே இருந்த ஓடினர். இது குறித்து அருகே இருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் செம்பியம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில் நவீன் என்கிற நரம்பு நவீன், ஹரி உள்ளிட்டோர் முன்விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என்ற நோக்கில் செம்பியம் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.


Tags : Rowdy ,Perambur , Famous rowdy, cut and killed, Perambur
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...