×

நடிகை பலாத்கார வழக்கு குறுக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இரு வாரங்களுக்கு முன் தொடங்கியது. இந்த விசாரணையை 6 மாதங்களில் முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மேலும், பலாத்கார வீடியோ காட்சியின் உண்மை தன்மையை சண்டிகரில் பரிசோதிக்கும்படியும் அது உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரையில், சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை நிறுத்தி வைக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் திலீப் புதிய மனு தாக்கல் செய்தார். இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வு, திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். அதே நேரம், இந்த அறிக்கை கிடைக்கும் வரையில் அவரிடம் மட்டும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டாம் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,cross-examination ,Actress , Actress, rape case, cross-examination, Supreme Court, ban
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...