×

மோதல் தொடர்கிறது கவர்னர் கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கவர்னர் அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக ஜகதீப் தன்கார் பொறுப்பேற்றது முதலே, மாநில அரசுடான உறவு சுமூகமாக இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்,  முதல்வருமான மம்தா பானர்ஜிக்கும் கவர்னருக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில்,  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கவர்னர் ஜகதீப் தன்கார் அழைப்பு விடுத்தார்.  ஆனால், இந்த கூட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.

இது குறித்து கவர்னரின் அலுவலகத்தை நேற்று முன்தினமே தொடர்பு கொண்ட முதல்வர் அலுவலக அதிகாரிகள், ‘பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு உள்ளதால், அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் மம்தா பங்கேற்பதற்கு வாய்ப்பில்லை.’ என கூறியுள்ளனர்.

Tags : meeting ,Mamata ,governor ,clash ,Conflict ,Mamta , Conflict, continued, Governor's meeting, boycotted, Mamta
× RELATED மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்