×

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெகபூபா ஷா பெங்களூரில் கைது

பெங்களூரு: எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெகபூபா ஷா பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா அமைப்பின் முக்கிய தலைவரான  மெகபூபா ஷாவிடம் பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கைதான அல் உம்மா அமைப்பை சேர்ந்த 3 பேர் தந்த தகவலின் பேரில் மெகபூபா ஷா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 8-ம் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் குற்றவாளிகள் கர்நாடக மாநிலத்தில் குற்றவாளிகள் பிடிபட்டனர்.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குமரி மாவட்டம்  திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேர்தான் இந்த கொலையை செய்ததாக தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். குற்றவாளிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மெகபூபா ஷா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Esesai Meghaubha Shah ,murder ,Wilson ,Bangalore , Arrested
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’