×

தகவல் தொடர்பு ஜிசாட் 30 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

பெங்களூரு : இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 30 செயற்கைக்கோள் ,பிரெஞ்சு கயானாவின் கவ்ரவ் விண்வெளி மையத்தில் இருந்து இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதுவே 2020- ம் ஆண்டில் இஸ்ரோ செலுத்திய முதல் செயற்கைக்கோள். இதன் எடை 3,357 கிலோ ஆகும். திட்டமிட்டப்படி சரியான பாதையில் சென்ற ஏரியான்-5 ராக்கெட், புவிசுற்றுவட்டப் பாதைக்கு சென்றதும், செயற்கைக்கோள் பிரிக்கப்பட்டு, திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, டி.டி.எச். மற்றும்,டிஜிட்டல் சேவைகளுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது

Tags : Gizad 30 ,ISRO ,Gizad , ISRO ,successfully launches , Gizad 30 satellite
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...