மதுரை : உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் பரிசாக கார் வழங்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனம், தங்கம், வெள்ளிக் காசுகள், சைக்கிள், பீரோ உள்ளிட்டவையும் பரிசாக வழங்கப்படுகிறது.