மதுரை : உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 700 காளைகள் 920 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், மதுரை மாவட்ட கலெக்டர் வினய், மாநகர காவல் ஆணையர் டேவிட்சர் தேவ ஆசிர்வாதம், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோரைக் கொண்ட ஜல்லிக்கட்டு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.