×

பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் சொகுசு பங்களா மீது மாவோயிஸ்ட் தாக்குதல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக பெங்களூரை சேர்ந்தவரின் சொகுசு பங்களா மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். கேரள மாநிலம், வயநாட்டில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவது வழக்கம். இங்குள்ள மேப்பாடி அருகே உள்ள அட்டமலையில் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான ஒரு சொகுசு பங்களா உள்ளது. அந்த தொழிலதிபரும், அவரது நண்பர்களும் அடிக்கடி இங்கு வந்து தங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த சொகுசு பங்களா மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். .

இது குறித்து பங்களா காவலாளி மேப்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு நோட்டீசை வீசி சென்றிருந்தனர். அதில், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின பெண்களுக்கு அரிசி, உணவு பொருள் வழங்குவதாக கூறி பங்களாவை சேர்ந்தவர்கள் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். இது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். உடனடியாக அவர்கள் இங்கிருந்து காலி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து மேப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : attack ,women ,Maoist , Woman, Sexual Harassment, Luxury Bungalow, Maoist, Assault
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...