×

ஓடும் ரயிலில் கரும்புகை: பயணிகள் இறங்கி ஓட்டம்

சேலம்:கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஐதராபாத்திற்கு, சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கொல்லத்தில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட சிறப்பு ரயில், நேற்று மதியம் 2.30 மணியளவில், சேலம் அருகே வீரபாண்டி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வந்தது. அப்போது, இன்ஜினுக்கு அடுத்துள்ள 2வது முன்பதிவில்லா பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனால், பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனடியாக டிரைவர் ரயிலை நிறுத்தியதால் பயணிகள், அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். பின்னர், டிரைவர் மற்றும் கார்டு வந்து பார்த்தனர். அப்போது, சக்கரம் பகுதியில் பிரேக் பிடிக்கும்போது சரியாக ரிலீஸ் ஆகாமல் எரிந்திருப்பது தெரியவந்தது. ஊழியர்கள் வந்து, அந்த பெட்டியின் பிரேக் பாயிண்டை சரி செய்த பின்னர், ரயில் புறப்பட்டு சென்றது.

Tags : passengers ,stream , running train, cane, passengers, descending stream
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!