×

பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்

திருச்சி: திருச்சி பழைய பால்பண்ணை விஸ்வாஸ்நகர் சர்வீஸ் ரோட்டில் நேற்றுமுன்தினம் இரவு லோடு ஆட்டோ ஒன்று நின்றது. அதிலிருந்து மயங்கிய நிலையில் இறங்கி வந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை பொதுமக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார், அந்த பெண்ணிடம் விசாரித்தபோது ஜங்ஷன் பகுதியில் ஆதரவற்று திரிந்த பெண் என்றும், ஜங்ஷன் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த 4 பேர் கும்பல் தன்னை கடத்தி வந்து லோடு ஆட்டோவில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : abduction ,kidnapper ,rape , Woman, kidnapper, rape
× RELATED “சென்னையில் குழந்தை கடத்தல் எதுவும்...