டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை என்று ராணுவ நாள் விழாவில் தளபதி நரவானே கூறியுள்ளார். பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் சகித்துக்கொள்ள முடியாது. மேலும் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மேற்குபகுதியை சேர்ந்த அண்டை நாட்டவரின் திட்டங்களை பெரிதும் பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.