டெஹ்ரான்: கடந்த வாரம் புதனன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில், உக்ரைன் விமானம் தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கியது. ஆரம்பத்தில் இது விபத்து என்று கருதப்பட்ட நிலையில், அதை தங்களது ஏவுகணை தவறுதலாக தாக்கியது என்று ஈரான் ஒப்புக் கொண்டது. இந்நிலையில், ஈரான் அரசின் செய்தி தொடர்பாளர் குலாம் கூறுகையில், “உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.