×

டிஎஸ்பியை அரிவாளால் வெட்டியவர் ரவுடியை அடித்து இழுத்து வரும் போலீசார்: வீடியோ வைரல்

விருதுநகர்: டிஎஸ்பியை வெட்டிய ரவுடியை போலீசார் அடித்து இழுத்து வரும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் தேர்தலின்போது 10 பேர் கொண்ட மர்மக்கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. அவர்களை அங்கு பாதுகாப்பில் இருந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேஷ் தடுத்தபோது அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, அருகில் உள்ள கண்மாய்க்குள் தப்பியோடினர். இதில், கண்ணார்பட்டி சுசிபாலா (24), அம்மன்கோவில்பட்டி பெரியகுமார் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவரை போலீசார் அடித்து உதைத்து இழுத்து வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘டிஎஸ்பி சாரின் கையை வெட்டிய  வுடிக்கு விருந்து வைத்த காவல்துறையினர்’ என்ற தலைப்பில் போலீசார் ஒருவர் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

Tags : Rowdy , DSP, Arrival, Vetti, Rowdy, Police, Video Viral
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...