×

12 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் 10ம் தேதி முதல் நேற்று மாலை வரை 14,492 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் மூலம் 7 லட்சத்து 30 ஆயிரத்து 365 பயணிகள் சொந்த ஊர் பயணம் செய்துள்ளனர். மேலும் நேற்று இரவு முழுவதும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் மூலம் 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மொத்தம் சிறப்பு பேருந்துகள் மூலம் 10 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். இதில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 632 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.10.8 கோடி வருவாய் கிடைத்துள்ளது.


Tags : home , 12 Lakhs, People, Hometown, Travel
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...