×

மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை...:வாகன சோதனையில் சிக்கிய கொள்ளையன்

சென்னை: சென்னையில் மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் அமர்நாத் என்பவரின் வீட்டில் கடந்த மாதம் 20-ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து அமர்நாத் அளித்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் வளசரவாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன் என்பதும், அவர் தான் மாங்காடு மற்றும் வளசரவாக்கத்தில் கொள்ளையில் ஈடுப்பட்டார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையனை கைது செய்த போலீசார் 22 சவரன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : company ,Mankadu , Burglary , private company ,employee , Mankadu ...
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...