டெல்லி: நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வினய், முகேஷ் சிங் மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி வினய், முகேஷ் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் ஜனவரி 22ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.