×

ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை : நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 14,60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார். ரூ. 12.70 கோடியில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகள் திறக்கப்பட்டுள்ளது. ஆவடி, ஸ்ரீமுஷ்ணம், கும்பகோணம், பாபநாசம், மானூரில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.


Tags : Edappadi Palanisamy ,building ,Collector ,Office , Chief Minister Edappadi Palanisamy,additional building , Collector's office
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...