×

திருவில்லிபுத்தூர் அருகே லாரிகள் மோதி 2 பேர் படுகாயம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகரில் இருந்து திருவில்லிபுத்தூருக்கு நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அழகாபுரி அருகே ராஜபாளையத்தில் இருந்து மதுரை சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. 


இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் மகேந்திரமணி, கோபால் படுகாயம் அடைந்து, லாரியின் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து வந்த நத்தம்பட்டி போலீசார் இடிபாடுகளில் சிக்கிய மகேந்திரமணி, கோபால் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தினால் மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Tags : trucks crashes ,Thiruviliputhur Thiruviliputhur , Two killed as lorries collide near Thiruviliputhur
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...