×

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளில் போலீஸாருக்கு துப்பாக்கி வழங்க நடவடிக்கை

கன்னியாகுமரி:  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளில் போலீஸாருக்கு துப்பாக்கித் தரப்பட்டுள்ளது. களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 303 ரைபிள் வகை துப்பாக்கி 37 சோதனைச் சாவடிகளில் உள்ள போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் ஒரு எஸ்.ஐ மற்றும் மற்றும் துப்பாக்கியுடன் கூடிய 4 போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எஸ்.ஐ வில்சன் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க அமைக்கப்பட்ட 10 தனிப்படையினர் கேரளாவில் முகாமிட்டு, அம்மாநில போலீஸாரின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, தமிழக – கேரளா எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : checkpoints ,Kanyakumari district , 303 rifle
× RELATED உதகை செல்வோருக்கு இ-பாஸ் நடைமுறை அமல்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு!