சிவகங்கை: மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட போலீசார் தர்பார் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மானாமதுரையில் உள்ள போலீசார் தங்கள் குடும்பத்துடன் தர்பார் படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை எஸ்பி ரோகித் நாதன் ஏற்பாட்டின் பேரில் குடும்பத்துடன் போலீசார் படம் பார்த்தனர்.