டெல்லி: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழுவை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து போட்டி நடத்த உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சிவபாலமுருகன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.