×

பைக் மீது டிப்பர் லாரி மோதி எஸ்ஐ மகன் பரிதாப பலி: 2 பேர் படுகாயம்

திருவொற்றியூர்: புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர். ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் நிதிஷ்குமார் (21). அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து நிதிஷ்குமார் மற்றும் சக அலுவலர்கள் யாசர் அராபத் (21), சிவா (21) ஆகியோர் ஒரே பைக்கில் மாதவரம் நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்கு புறப்பட்டனர்.
மாதவரம் கனகசத்திரம் அருகே வந்தபோது, இடது புறத்திலிருந்து திரும்பிய டிப்பர் லாரி திடீரென  பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய 3 பேரும் பைக்குடன் கீழே விழுந்தனர்.

அப்போது நிதிஷ்குமார் மீது லாரியின் சக்கரம் ஏறி, இறங்கியது. மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர். இதை பார்த்த சக வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நிதிஷ்குமார் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Dipper Larry Moti ,SI , On the bike, Dipper Larry Moti, SI's son, pity
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’