×

புறப்பட்ட சிறிது நேரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் சென்ற விமானத்தில் கோளாறு

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற விமானத்தில் திடீரென்று கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.  தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 149 பேருடன் மதுரைக்கு மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட தனியார் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு ஓடுபாதை வரை சென்ற விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. பின்பு இழுவை வண்டி மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் உட்பட பயணிகள் அனைவரும் 2 மணி நேரமாக விமானத்திலே அமர்ந்திருந்தனர். விமான பொறியாளாகள் விமானத்தை பழுதுபாா–்த்தனா். இரவு 8.30 மணிக்கு விமானம் சரி செய்யப்பட்டு, மீண்டும் புறப்பட்டது.

Tags : deputy deputy chief OPS ,flight , Deputy Chief OPS, Flight, Disorder
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...