×

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை: அரசு உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள் புற்றுநோய் சிகிச்சை பெற கூடுதல் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பொதுத்துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: அரசு ஊழியர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு கீமோ தெரபி, ரேடியோ தெரபி சிகிச்சை அளிக்க தொடக்கம் முதல் முடியும் வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால், அதற்கான விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் மருத்துவ அதிகாரியிடம் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

Tags : holidays ,government employees ,Govt , Cancer, treatment, civil servant, extra leave, government order
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்