×

குடிகாரன் என பெண் கொடுக்க மறுப்பு மதுவில் விஷம் கலந்து குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வானாதிராஜபுரம் பெருமாள்கோயில் தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன்(75). இவரது மகன் சேதுராமன்(40). எலக்ட்ரீசியன். குடிபழக்கம் உடையவர். தினமும் சம்பாதிக்கும் பணத்தை குடித்துவிட்டு வந்தார். பெற்றோர் கண்டித்தும் குடியை விடவில்லை.இந்நிலையில் மகனுக்கு திருமண ஏற்பாட்டை வைத்தியநாதன் செய்து வந்தார். குடிபழக்கத்தை தெரிந்துகொண்டு சேதுராமனுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இது தெரிந்த சேதுராமன் மனமுடைந்து காணப்பட்டார். 40 வயதான எனக்கு திருமணமே ஆகாதா, நான் மட்டுமா குடிக்கிறேன்.

ஊரே குடிக்கிறதே என்று புலம்பியபடியே இருந்துள்ளார்,இந்நிலையில் கடந்த 10ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு பெருமாள்கோயில் வளாகத்திலேயே மயங்கிவிழுந்தார், திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்த சேதுராமன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.



Tags : Electrician suicide ,alcohol Electrician ,suicide , Electrician, suicide , drinking ,alcohol
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை