×

திருப்பத்தூர் அருகே சந்தனமர கட்டைகளை கடத்திய 2 பேர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சந்தன மரக்கட்டைகளை கடத்திய 2பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை புதூர்நாடு பகுதியிலுள்ள நெல்லிவாசல் நாடு அருகே உள்ள மேல்பட்டு மலைப்பகுதியில் இருந்து சந்தன மரத்தை வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்றிரவு வனத்துறை ரேஞ்சர் சோழராஜன் மற்றும் வனவர் சஞ்சீவி ஆகியோர் புதூர்நாடு  மலைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மூட்டையுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 6 கிலோ எடை கொண்ட சந்தனக்கட்டைகள் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேல்பட்டி பகுதியை சேர்ந்த பழனிவேல்முருகன்(35), வேடி(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 2பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ சந்தனமரக்கட்டைகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


Tags : Tirupathur Kidnapping ,Sandanamara ,persons , Sandanamara,Tirupathur,kidnapping
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...