×

திருவண்ணாமலை அருகே காட்சி பொருளான குப்பை தொட்டிகள்

திருவண்ணாமலை: கிராமங்களில் குடியிருப்பு உள்ள பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுவதை தடுக்க ஊரக வளர்ச்சி துறை சார்பில் திடக்கழிவு மேலான்மை திட்டத்தின் கீழ் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய குப்பை தொட்டிகளில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதால் தூய்மை பணியாளர்கள் சிரமம் இன்றி குப்பைகளை அகற்றி வருகின்றனர்.இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள், கிராமத்தில் வீதிகளில் வைக்கப்படாமல், கிராமத்திற்கு வெளியே உள்ள நிழல் கூடம் அருகே  திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலை ஓரத்தில் 10 குப்பை தொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த குப்பை தொட்டிகள் இந்த கிராமத்திற்கு வழங்கப்பட்டு பல நாட்களாகியும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆங்காங்கே வைக்கப்படாமல் சாலை ஓரம் ஒரே இடத்தில் காட்சி பொருளாக வைக்கப்படுள்ளது என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பைகள் கொட்டுவதற்காக வழங்கப்பட்ட குப்பை தொட்டிகளை வீதிகளில் பிரித்து வைக்கப்படாமல் கிடப்பதால், குப்பை தொட்டிகள் மழை மற்றும் வெயிலில் சேதமடையும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை கிராமத்தில் உள்ள வீதிகளில் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Thiruvannamalai Thiruvannamalai ,trash bins , Trash,Thiruvannamalai
× RELATED கார் கண்ணாடி உடைத்து லேப்டாப்,...