×

மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிப்பு பயிற்சி

குமாரபாளையம்: குமாரபாளையம்  அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளியில், வனம் செய்வோம் அமைப்பும்,தேசிய  பசுமைப்படையும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும்  பயிற்சியை வழங்கியது. விதைகளே பேராயுதம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு  சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாணவர்கள்  1301 விதைப்பந்துகளை தயாரித்தனர்.

இந்த விதைப்பந்துகளை தரிசு நிலங்கள்,  சாலையோரங்கள், அரசு நிலங்களில் வீசி மரம் செடிகள் வளர்க்க தேவையான  பயிற்சிகள் வழங்கப்பட்டது. வனம் செய்வோம் அமைப்பின் நிர்வாகிகள் வருண்  சுப்பிரமணியம்,கதிர்வேல்,குரு, பிரகாஷ், மோகன்தாஸ், பள்ளி தலைமை ஆசிரியர்  ஆடலரசு, பசுமைப் படை ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களை  ஊக்கப்படுத்தினர்.

Tags : Seedball ,preparation , students
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...