×

பிரதமர் மோடிக்கு எதிராக பேசினால் அவர்களை உயிரோடு புதைப்பேன்...:பாஜ அமைச்சர் சர்ச்சை பேச்சு

உத்தரப் பிரதேசம்: பிரதமர் மோடிக்கு எதிராக பேசினால் உயிரோடு புதைப்பேன் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பேசினால் அவர்களை உயிரோடு புதைப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிராக பாஜக சார்பில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டதிற்கு ஆதரவாக பேரணி நடத்தி வருகிறது. அந்தவகையில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பாஜக அமைச்சர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேரணியில் அமைச்சர் ரகுராஜ் சிங் பேசியது: சிஏஏ-க்கு எதிராக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதோடு, பிரதமர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் இந்தியாவில் தங்கியிருந்து கொண்டு எங்கள் வரிப்பணத்தை சாப்பிடுகிறார்கள். பின்னர் தலைவர்களுக்கு எதிராகவே கோஷங்களை எழுப்புகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பினால் அவர்களை உயிருடன் புதைப்பேன். மேலும் இந்த நாடு அனைத்து ஹிந்து மக்களுக்கும் சொந்தமானது என சர்ச்சை கருத்தை பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Tags : talks ,Modi ,BJP , BJP,Modi, ,bury ,alive ...
× RELATED பழங்குடியின பெண்ணை குடியரசுத்...