புதுச்சேரி: தமது பாகூர் தொகுதியில் அரசு திட்டங்களை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ. தனவேல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தது பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேல் விளக்கமளித்தார். ஆளுநர் ஆய்வு செய்ய வந்தால் செல்லக்கூடாது என்று எனக்கு அழுத்தம் தரப்பட்டது என அவர் குறிப்பிட்டார். அரசு மருத்துவமனை குறைகளை பேசக்கூடாது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் என்னை தடுத்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.