மதுரை: அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை, மாநகராட்சி ஆணையர்கள் ஒருங்கிணைப்புக்கு குழுவின் உறுப்பினராக செயல்படுவர். மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ராமசாமி உள்பட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக மனுதாக்கல் செய்திருந்தனர்.