×

நகை பிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! : ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.304 குறைந்து ரூ.30,256க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று  குறைந்துள்ளது. உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு பன்மடங்கு அதிகரித்ததை அடுத்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.  புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நகை வாங்க அதிகம் செலவிட வேண்டியிருக்கிறதே என்ற கவலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நற்செய்தியாக இன்று தங்கம் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.30,256க்கு விற்பனை ஆகிவருகிறது. இது நேற்றைய விலையை விட 304 ரூபாய் குறைந்ததாகும். ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 3,782க்கு விற்பனை ஆகிறது. இது நேற்றைய விலையை விட 38 குறைவாகும். வெள்ளியின் விலையிலும் இன்று சற்று குறைந்துள்ளது. உலோகச் சந்தையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ. 50க்கு வர்த்தகம் ஆகி வருகிறது. நேற்று 50.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,000 ஆக இருக்கிறது.


Tags : jewelry lovers ,Sovereign , Sales, Silver, Price, Jewelry, Gold
× RELATED நகை வாங்க நல்ல நேரம்! : ஆபரணத்...