புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், தமிழரசி என்பவரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கத்தி குத்தில் காயமடைந்த தமிழரசி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழரசியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.