×

2020ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோள் ஜிசாட் 30: பிரெஞ்சு கயானாவிலிருந்து வரும் 17-ம் தேதி ஏவப்படுகிறது...இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து வரும் 17ஆம் தேதி அதிகாலை ஏவப்பட உள்ளது.ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. 3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த ஜிசாட்30 செயற்கைக்கோளானது Ku-band-ல் இந்திய நிலப்பரப்பு மற்றும் தீவுகளின் பாதுகாப்பையும், C-band-ல் வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பாதுகாப்பை வழங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது. 2020ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட் 30 வருகிற ஜனவரி 17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : French Guiana ,ISRO , Gizat 30, the first satellite of 2020: Launched on 17 March from French Guiana ...
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு