×

நல்லம்பள்ளி அருகே ஏரியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே கோவிலூர் ஏரியில் குப்பைகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நல்லம்பள்ளி அடுத்துள்ள கோவிலூர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை, துப்புரவு தொழிலாளர்கள் எடுத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம் பிரித்து வந்தனர். இந்நிலையில், திடக்கழிவு திட்ட பணி செயல்படாததால் குப்பைகளை சேகரிப்பதை துப்புரவு பணியாளர்கள் நிறுத்தி விட்டனர்.

இதனால், பொதுமக்கள் கோவிலூர் பகுதியில் உள்ள ஏரியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக, ஏரியில் தேங்கியுள்ள தண்ணீர் பச்சை நிறத்தில் மாறி, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரியில் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதிக்கவும், ஏரியை தூர்வாரவும் மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lake ,Nallampalli , Nallampalli, lake, litter, health disorder
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...