×

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐயை தாக்க முயன்றவர் கைது

சென்னை: புளியந்தோப்பு எஸ்ஐ சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று காலை கன்னிகாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, வேகமாக வந்த காரை மடக்கி நிறுத்தினர். அதிலிருந்து இறங்கிய 3 பேர், எஸ்ஐ சத்தியமூர்த்தியை தகாத வார்த்தையால் திட்டி, அவரை தாக்க முயன்றுள்ளனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, 2 பேர் தப்பினர். ஒருவர் பிடிபட்டார்.

விசாரனையில், அவர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (25) என்பது  தெரியவந்தது. அவரை கைது செய்தனர். தப்பியோடிய பாம் சரவணன் மற்றும் ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.
* நெற்குன்றம் அகத்தியர் நகர் 2வது தெருவை சேர்ந்த பாலாஜி (35) என்பவரின் புதிய பைக்கை நேற்று நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
* புளியந்தோப்பு கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தில் மது பாட்டில்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (30) மற்றும் பத்மா (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பெருங்குடி குப்பை கிடங்கு நுழைவாயில் அருகே நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் உட்கார்ந்த நிலையில் சடலமாக கிடந்தார். போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags : SI SI , Vehicle Trial, SI, Attempt, Arrested
× RELATED சூளைமேட்டில் அழுகிய உடல் மீட்பு மத்திய உளவுத்துறை எஸ்ஐ மர்ம மரணம்