×

அதிமுக கூட்டணி விவகாரங்களை பொதுவெளியில் பேசாதீர்கள்: தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் உத்தரவு

சென்னை: அதிமுக கூட்டணி விவகாரங்களில் கட்சி தலைமை மட்டுமே முடிவெடுக்கும். தொண்டர்கள் தனிப்பட்ட வகையில் கருத்துக்களை  பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். அதிமுக கூட்டணி வியூகங்கள் குறித்து கட்சி தலைமை மட்டுமே முடிவெடுக்கும். இதுபற்றி தொண்டர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் கருத்துக்களை  பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது. பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலும் தெரிவிக்க வேண்டாம். இது தேவையற்ற விவாதங்களை உருவாக்கும். எனவேதான் இதை கண்டிப்புடன் தெரிவிக்கிறோம். கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை நினைவில் வைத்திருக்கவும் என்று இவர்கள் வௌியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : public ,AIADMK ,volunteers , AIADMK, Alliance, Volunteers, EPS, OPS
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...