×

பட்டப்பகலில் வீட்டை உடைத்து 18 சவரன் திருடியவர் கைது: சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்

சென்னை: சென்னை எஸ்.எம்.பி. கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன். கடந்த நவம்பர் 15ம் தேதி பட்டப்பகலில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 18 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து, ஸ்ரீதரன் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கொள்ளை நடந்த வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, ஆசாமி ஒருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில், அவர் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ரவுடி பிரகாஷ் என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, 18 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும், தற்போது மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறமாக தங்கி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


Tags : graduation Graduation ,house ,Man 18 , The man who broke into the house and arrested the robber
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்