×

பங்கு சந்தையில் நஷ்டம் முதலீட்டாளர் தற்கொலை முயற்சி

சென்னை:தி.நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57). பங்கு சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறார். கடந்த சில மாதமாக பங்குசந்தையில் அதிக நஷ்டம் ஏற்பட்டதால் மனரீதியமாக பாதிக்கப்பட்டு காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் அறைக்குள் சென்று அதிக நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Stock market loser investor , Stock market, loser, investor, suicide attempt
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை