×

சாட்டிலைட் போன் சிக்னல்: திருப்பூரில் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகேயுள்ள ஆதியூர் பகுதியில் சாட்டிலைட் போன் பயன்படுத்தப்பட்டது குறித்த சிக்னல் சில தினங்களுக்கு முன் கிடைக்கப்பெற்றது. ஜிபிஎஸ் மூலமாக இடம் கண்டறியப்பட்டு மத்திய உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உளவுத்துறையினர் சாட்டிலைட் போன் பயன்படுத்திய நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உளவுத்துறை அதிகாரி கூறுகையில், ‘‘மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஏ.) மூலமாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. குன்னத்தூர் தவிர அருகேயுள்ள காங்கயம் பகுதியிலும் சாட்டிலைட் போன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பயன்படுத்தியவர்கள் யார்? என்பது குறித்து ரகசியமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழலில் தனிப்பட்ட நபரா? அல்லது ஏதேனும் தீவிரவாத அமைப்பை சார்ந்தவர்களா?, தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் பயன்படுத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என தெரிவித்தனர்.


Tags : Tirupur ,Investigation , Satellite phone, signal, Tirupur
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்