திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகள் 20 பேர் நேற்று திருப்பதிக்கு வந்தனர். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் இணை செயல் அலுவலர் பசந்த் குமார் தேவஸ்தான நிர்வாக செயல்பாடுகள் குறித்து விளக்கினார். அப்போது நிர்வாகம் செயல்படுத்தி வரும் ஆன்மிக, தார்மிக நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், மருத்துவம் மற்றும் கல்வி சேவைகள் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் அன்னதான கூடம், கல்யாண கட்டா உள்ளிட்ட இடங்களை நேரில் சுற்றிப்பார்த்தனர்.