×

ரிஷி பாவேந்தன் சாம்பியன்

சென்னை: விஎஸ்டி டிராபி டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரிஷி பாவேந்தன், குந்தனா ஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்றனர். பெருங்குடி கிருஷ்ணன் டென்னிஸ் அகடமியில் விஎஸ்டி டிராபி டென்னிஸ் போட்டிகள் நடந்தன. அதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரிஷி பாவேந்தன் - மோனில் லோட்லிகர் மோதினர். அதில் ரிஷி பாவேந்தன் 6-1, 6-3 என நேர்செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் குந்தனா ஸ்ரீ - உத்ஷா கல்ரா மோதினர். சிறப்பாக விளையாடிய குந்தனா ஸ்ரீ 6-1, 6-1 என்ற நேர்செட்களில் எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முன்னாள் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, தமிழ்நாடு டென்னிஸ் சங்க செயலாளர் பிரேம்குமார் கார்ரா ஆகியோர் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.

Tags : Rishi Pavendan , Rishi Pavendan
× RELATED ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80*...